தாயென்று கும்பிடடி பாப்பா
- பெருமை வாய்ந்த பிள்ளையார்
கீதா சாம்பசிவம்
இனி நாம் காணப்போவது விநாயகரின் ஷோடச நாமங்கள் ஆகும். அதாவது விநாயகருக்கு உள்ள பதினாறு பெயர்களையும் அவற்றின் விளக்கங்களையும் பார்க்கப் போகிறோம். ஸுமுகர், ஏகதந்தர், கபிலர், கஜகர்ணகர், லம்போதரர், விகடர், விக்நராஜர், விநாயகர், தூமகேது, கணாத்யக்ஷர், பாலசந்த்ரர், கஜானனர், வக்ரதுண்டர், சூர்ப்பகர்ணர், ஹேரம்பர், ஸ்கந்தபூர்வஜர் என்று விநாயகருக்குப் பதினாறு பெயர்கள் உண்டு. முதல் நாமம் ஸுமுகர் என வருகிறது. எல்லாரிடமும் ஸுமுகமாய் இருக்கணும் என்று சொல்லுவார்கள் இல்லையா? “ஸூ” என்றால் நல்ல, முகம் என்றால் தெரியும் இல்லையா? நல்ல முகம். அதாவது இன்முகம். இன்முகம் காட்டி வரவேற்றார்கள் என்பார்களே, கேட்டிருப்பீங்க இல்லையா? விநாயகர் அத்தகையதொரு இன்முகத்தோடேயே எப்போதும் காட்சி அளிக்கிறார். ஆகையால் அவருக்கு ஸுமுகர் என்ற பெயர்.
விக்னேஸ்வரர் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவருடைய கருணா கடாக்ஷம் ஆநந்தத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும் அவரைப் பார்க்கும்போதே நமக்குள் இனம் தெரியாத ஒரு சந்தோஷம் உண்டாகிறது. பிள்ளையாரைப் பார்க்கப் பார்க்க நமக்கு அலுப்பதில்லை. எல்லாச் சிவாலயங்களிலும் இவரைப் பார்த்துவிட்டுத் தான் உள்ளேயே போகவேண்டும். அதிலும் தன் பெரிய தொந்தியைத் தூக்கிக்கொண்டு நிருத்த கணபதியாக நாட்டியமாடிக்கொண்டு காட்சி அளிப்பார். மேலும் முகம் என்றால் வடமொழியில் மூஞ்சிக்கு மட்டுமில்லாமல் வாய்க்கும் அதுதான் பெயர். முகம் என்றால் வாய்தான். தமிழில் மூஞ்சிக்குப் பெயரை முகம் என்ற வடமொழிப் பெயராலேயே அழைக்கிறோம். அத்தகைய வாயினால் ஸத் விஷயங்களைத் தன் வாயால் சொல்பவர் விநாயகர். வித்யை, அதனால் அடையும் ஞாநம் இவற்றை உடையவர் விநாயகர். அத்தகைய ஞாநத்தைத் தன் வாயினால் போதிப்பதாலேயும் இவர் ஸுமுகர் என்று சொல்கிறோம்.
மேலும் யானை வடிவான விநாயகருக்கு அந்த யானையைப் போலவே தும்பிக்கை உள்ளது அல்லவா? நமக்கெல்லாம் வாய் தெரிகிறாப்போல் உதடு இருக்கிறது. ஆனால் யானைக்கோ வாயை மூடிக்கொண்டு தும்பிக்கை தொங்குகிறது அன்றோ? அதே போல் விநாயகருக்கும் வாய் தெரியாமல் தும்பிக்கை இருக்கிறது. சாப்பிடும்போதும் யானை பிளிறும்போதும் மட்டுமே தும்பிக்கையைத் தூக்கிக்கொண்டு தன் வாயைக் காட்டுகிறது. அவ்விதமே விநாயகரும் காரண, காரியமில்லாமல் வாயைத் திறக்காமல் காரண, காரியத்தோடு வாயைத் திறக்கிறார். மற்ற நேரங்களில் தன் தும்பிக்கையால் வாயை மூடிக்கொள்கிறார். இது தான் அவருடைய ஸுமுகத்துக்குப் பொருள். அடுத்து ஏகதந்தர்.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















