Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  என்னைப்பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.


Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
காயத்ரீ மந்திரம்
இணையப் பாட்டி



ஆவணியாவட்டத்தின் மறு நாள் காயத்திரி ஜபம் என்ற நாள் வருகிறது .அதாவது யக்ஞோபவீத தாரணம் செய்தபின் மறு நாள் இது வரும். அந்த நாளுக்கே ஒரு தனி சிறப்பு உண்டு. காயத்திரி ஜபம் அன்று மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. தினமும் எப்போதும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம். அது மிகுந்த சக்தியான மந்திரம். .ஆதவன் நம் கண்னிற்குத் தெரியும் பிரும்மம். அந்த சூரியன் இல்லை என்றால் ஒரு புல் பூண்டு கூட இருக்காது, .அப்படிப்பட்ட பிரும்மத்தை வழிப்பட்டு வாழ்க்கையில் மேன்மை பெற ராஜரிஷி விசுவாமித்திரர் என்னும் க்ஷ்த்திரியர் நமக்கெல்லாம் கண்டு பிடித்துத் தந்த வரப் பிரசாதம், வேதமே காயத்திரி.

"காயத்திரி பரமோ ம்ந்த்ர: ந்மாதூர் தைவதம் பரம்" என்கிறது சாஸ்திரம். ந மாதுர் அதாவது தாயை விடச் சிறந்த தெய்வமில்லை காயதிரியை விடச் சிறந்த மந்திரமில்லை. காயத்திரி தேவி உலகத்திற்கே பராசக்தி ஆவாள். வேதத்தில் வரும் சத்வ, ரஜ, தமஸ் என்ற முக்குண்ங்களுக்கும் காரணமாகவும், பரமேஸ்வரியின் சக்தியாகவும் சொல்லப் பட்டிருக்கிறது.

மந்திரம் என்றால் என்ன? மன்னா த்ராயதே இதி மந்திர:

அதாவது மனதைக் கடைவது, தயிரை மத்தால் கடைய வெண்ணெய் திரண்டு வரும். அது வந்தபின் மேலே ஒன்றிலும் ஒட்டாமல் மிதக்கும். இதே போல தயிர் என்ற மனத்தை மந்திரம் என்ற மத்தால் கடைய எண்ணங்க்ளே இல்லாத மனம் ஆன்மாவில் மிதக்கும், இத்தனைச் சிறப்பு மந்திரங்களுக்கு உண்டு, அதிலும் கீதை நாயகன்' மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்." என்கிறார். இதிலிருந்தே அதன் சிறப்பு தெரிய வருகிறது.

உபநயனம் போது உபதேசம் நடக்கும். அந்தப் பையன் தன் தந்தையின் காதில் ஒம் "என்ற ப்ரணவ மந்திரம் ஒதுவதை நாம் பார்திருக்கிறோம். பின் காயத்திரி மந்தரம் ஆரம்பிக்கிறது. இதில் ஒம் பூர்புவஸ்ஸுவ: என்று ஆரம்பம். இதில் மூன்று வேதமும் வருகிறது. மனு அவர்க்ள் கூறுகிறார், "த்ரீப்ய; ஏவது வேதேப்ய; பாதம் பாத மதாது ஹத்" பிரும்மதேவன் வேதத்தின் சாரததைக்காண எண்ணி பின் ரிக் வேதத்திலிருந்து "பூ" என்பதையும் யஜுர் வேதத்திலிருந்து "புவ:" என்பதையும் சாமவேதத்திலிருந்து "ஸுவ:" என்றும் கண்டு பிடித்தாராம். அதன் பின்னரும் அதை மேலும் ஆராய்ந்தார். பிரணவம் என்ற ஒங்காரம் ஒளிர்ந்தது. ஒம் என்பதைப் பிரித்தால் அ+உ+அம் என்று வெளிப்படும், அது படைத்தல், காக்கல், அழித்தல் அதாவது பிரும்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவரையும் தன்னகத்தே கொண்டது.

காயத்திரி என்பதைப் பிரித்தால் காயந்தம்+த்ராயதே என்று வரும், அதாவது ஜபிப்பவனைக் காப்பாற்றுகிறது. நான் வேதங்களில், மந்திரங்களில் காயத்திரியாக் இருக்கிறேன் என்கிறார் கிருஷ்ணபரமாத்த்மா. நாரதர் சொல்லுகையில், "த்வமேவ சந்த்யா காயத்ரி சாவித்ரி ஸரஸ்வதி பிரும்மாணி வைஷ்ணவி ரகதஸ்வேதா, ஸிதேதரா" என்று புகழுகிறார்.

பின் சொல்லுகிறார், "ஒ காயத்ரியே! உன் புகழை என்ன என்று சொல்வது? மஹான்கள் சரீரத்தில் நாடியாகவும், ஹ்ருதயத்தில் பிராண சக்தியாகவும் கண்டத்தில் ஸ்வப்ன நாயகியாகவும் பிந்து ஸ்தானத்தில் இருப்பவளாகவும் மூலாதாரத்தில் குண்டலினி சக்தியாகாவும் பாதாதி கேசம் வரை வியாபித்தவளாகவும் சிக மத்யத்தில் அமர்ந்த்திருப்பவளாகவும் உச்சியில் மனோன்மணியாகவும் எல்லா வஸ்துக்களிலும் நிறைந்து இருக்கும் சக்தியாகவும் ஆகிறாள். காலையில் காயத்ரியாகவும் உச்சிப் பொழுதில் சாவித்ரியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் இருக்கிறாள்..

ஒம் பூர்பவஸ்வ: ஒம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்

இதுதான் காயத்ரி மந்திரம்

இதன் பொருள் எல்லா பிராணிகளின் இதயத்தில் அந்தர்யாமியாய் இருந்துகொண்டு புத்தியைத் தீட்டிக்கொடுப்பவளும் சூரியமண்டலத்தில் இருந்துகொண்டு வெளிச்சம் கொடுப்பதால் யாவரும் சேவிக்க வேண்டியவளாகவும் விள்ங்குகின்ற காயத்ரியைத் தியானம் செய்கிறேன்.

இனி அதன் மகிமையைப் பார்க்கலாம்:

காயத்ரி ப்ரோச்யதே புதை" பாபங்களிலிருந்து காக்கிறது, புத்தி தீர்க்கமாகிறது, சிறந்த சித்திகள் கிட்டுகின்றன. "ந தத்ர ம்ரியதே பால:" குழந்தைகள் அகால மரணம் அடைவதில்லை. சரவ பாபானி நச்யந்தி காயத்ரி ஜபதே ந்ருப: எல்லா பாபங்களையும் போக்கி விடுகிறது.

இத்தனை சிறப்புப் பெற்ற காயத்ரி மந்திரத்தை விடாமல் ஜபித்து வாழ்வை மேம்படுத்தலாமே. பேய் பிசாசு நம்மை அண்டாது. ஐந்து முகங்கள் பத்து கைகளுடன் சந்திரக் கலைத்தரித்த காயத்ரி நம்மை எல்லாம் ரக்ஷிப்பாளாகுக.

பின் குறிப்பு: எனக்கு தெரிந்த அளவு காயத்ரி ம்ந்திரத்தைப் பற்றி எழுதி உள்ளேன். ஒரு 108 தடவை இதைச் சபித்தால் நிச்சயம் ப்லன் தெரியும். இது ஒரு ரக்ஷைப் போல் காக்கும் கவசம்.

அன்புடன் விசாலம்.

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants