தாயென்று கும்பிடடி பாப்பா
- ஆசிரியை மனம்
இணையப் பாட்டி
தற்காலக் கல்வியில் நம் எல்லோருக்கும் ஒத்து வரும்படிப் பல விதமான பிரிவுகள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. நிறைய வேலை வாய்ப்பும் அதனால் ஏற்பட்டுள்ளன. ஆனால் ஒரு டாக்டர் ஆனாலோ அல்லது இஞ்ஜினியர் ஆனாலோதான் சிறந்த படிப்பு, அந்தப் பிரிவில் படித்தவன் தான் சிறந்தவன் என்ற கணிப்பு மாற்றப்பட வேண்டும். எல்லோருக்கும் அந்தப் பிரிவில் ஆர்வமோ, அல்லது லட்சியமோ இருக்க வாய்ப்பு இல்லை. அப்போது பெற்றோர்கள் தன் மக்களை அவர்கள் விருப்பமில்லாமல் தாங்கள் நினைத்தது தான் படிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது தவறு.
சித்திரம் வரைவதில் ஆர்வம் உள்ள ஒருவனை, "ஆமாம், நீ படம் வரைந்து கிழிக்கப் போகிறாய், அதுதான் சோறு போடுமா? என்று அவனது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். என் பள்ளியில் மணி அடிப்பவனின் மகன், குஷிராம் என்று பெயர், அவன் அம்மா பாத்திரம் தேய்த்துப் படிக்க வைத்தாள். அவனுக்கு அவவளவு படிப்பு வரவில்லை. ஆனால் அவனுக்கு மின்சார சாதனங்களைப் பழுது பார்ப்பதில் ரொம்ப ஆர்வம். கஷ்டப்பட்டு 8வது தேறினான். அதற்குப் பின் அவனால் முடியவில்லை. நாங்கள் எல்லோரும் பணம் சேர்த்து அவனை ஒரு மின்சாரத் துறை சம்பந்தப்பட்ட வகுப்பிற்கு அனுப்பி வைத்தோம். ட்ரெய்னிங் இன்ஸ்டிடூயூட்டில் சேர்த்து இப்போது அவன் அதில் வெகு வேகமாக முன்னேறி, தற்போது ஒரு கடையே திறந்துள்ளான் அவனில்லாமல் ஒரு கல்யாணமும் நடப்பதில்லை, அவன் தான் விளக்கு அலங்காரம் செய்கிறான்.
நம் திரு ஹரிஹரன் (கஜல் புகழ்), படிப்பில் பெரிய அளவு இல்லை என்றாலும் அவர் குரல் வள்மும் பாட்டில் இருக்கும் உயிரும் எல்லோரையும் வளைத்துப் போட்டது. சின்ன வயதிலிருந்து அவர் எனக்கு நல்ல பழக்கம். நான் ஒரு தடவை ஜெனீவா போயிருந்தபோது ஹோலிப் பண்டிகை இருந்தது. அதற்கு நிறைய இந்தியர்களைக் கூப்பிட்டிருந்தார்கள். நானும் போயிருந்தேன் அப்போது ஒரு இளைஞன் புல்கானின் தாடியுடன் மிகவும் ஸ்டைலாக நடனம் ஆடிக்கொண்டிருந்தான். பின் நடு நடுவே என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். எனக்கு எங்கேயோ பார்த்தாற்போல் இருந்தது. பதிலுக்கு நானும் புன்னகை வீசினேன். உடனே அவன் ஓடி வந்து, "மேடம், நான் தான் மஹேஷ், உங்கள் பிடிதத மாணவன் என்றான், பின் குனிந்து என் பாதத்தை ஒற்றிக் கொண்டான், இங்கு எங்கே? என்று கேட்டேன். "நீங்கள் சொன்னது போல் நான் டெக்ஸ்டைல் டிசைன் எடுத்துப் படித்தேன். இப்போது எக்ஸ்போர்ட் பிஸ்னஸ் செய்கிறேன் எல்லாம் உங்கள் ஆசிகள்தான்" என்று சொன்னதும் நான் சுவர்க்கத்திற்கே போய்விட்டேன். ஒரு ஆசிரியைக்குத் தன் மாண்வன் பணிவாக, பணம் இருப்பினும் கர்வமில்லாது, குருவின் காலில் விழுந்தால் அதை விட மகிழ்ச்சி வேறு ஏது? இப்போது கல்வி, ஹோட்டல் மெனேஜிங், மாடலிங், நடிப்பு, கல்லூரி, ஏர் ஹோஸ்டஸ் டிரெய்னிங், சிற்பக் கலை, தோட்டக்கலை என்று பலவிதமாக இருந்து, வேலை வாய்ப்பும் கிடைக்கிறது அதை நன்றாக உபயோகப் படுத்திக் கொள்ளலாம், செய்யும் தொழிலே தெய்வம் என்பதை வளர்த்துக் கொண்டால் உலகமே நம் முட்டியில் தான், ஆனால் கூட நேர்மை, ஒழுக்கம், அன்றன்று காரியங்களை அப்போதே முடிததல், மனிதாபிமானம் போன்றவைகள் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
கல்வியில் education in human value என்பதைக் கொண்டு வர வேண்டும், அதற்கு நல்ல ஆசிரியர்கள் தேவை, அதற்கு ஆசிரியர்கள் மன மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர்கள் வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான செல்வம் கிடைக்க வேண்டும். மாணவர்களைக் குழந்தைகளாகவும். அதே சமயம் தன் நண்பர்களாகவும் நினைத்துப் பழக வேண்டும். "To sir with love " சினிமா இதற்கு நல்ல உதாரணம்.
ஒரு அறிஞர் சொல்லுகிறார், "unless knowledge is transformed into wisdom and wisdom is expressed into charecter, education is a wasteful process, the end of education is charecter and the end of knowledge is love.
தங்கம், சொத்து, பணம், இவைகளைவிட நமக்குக் கல்வி வழியாகக் கிடைக்க வேண்டிய சொத்து உண்மை அன்பு, ஒழுக்கம், சாந்தி, அமைதி. இந்த இரத்தினங்கள் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவை. இவைகளை இதயம் என்ற வங்கியில் சேர்த்து வைப்போம்.
அன்புடன் அம்ம்ம்மா
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














