Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  என்னைப்பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.


Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தன்சென்
இணையப் பாட்டி



அன்பு குழந்தைகளே,

தன்சென் என்ற ஒரு இசை மேதை அக்பர் அரசவையில் இருந்தார். அவர் அக்பர் முன் பல பாடல்களைப் பாடி சுல்தான் அக்பரை மகிழ்விப்பார். பாடும் போதும் தன் அரசர் எவ்வளவு தூரம் தன் இசையை ரசிக்கிறார் என்று அவர் முகத்தையே பார்ப்பார். அவர் பாடினால் இயற்கையும் மகிழும். அவர் மேக் மல்லார் என்ற ராகம் பாடுவார், கரு மேகங்கள் சூழும், "வருணா" பாடினால் மழை கொட்டும், நம் அமிருதவர்ஷிணி ராகம் போல்.

அந்தக்காலத்தில் அரசர் மாறு வேடம் பூண்டு வீதி வலம் வருவது வழக்கம். நாடு எப்படி இருக்கிறது, மக்களின் கருத்து என்ன? என்று தெரிந்துக்கொள்ள இப்படி செய்வார்கள். பேரரசர் அக்பரும் ஒரு நாள் மாறுவேடம் பூண்டு நகர்வலம் வந்தார். அப்போது ஒரு ஆலயத்தில் ஒருவர் தன்னையும் மறந்து பாடிக்கொண்டிருந்தார். அவரைப் பற்றிக் கேட்டார் அக்பர் "அவர் தான் குரு ஹரிதாஸ் ஜி" என்றார் ஒருவர், அவர் இசையோ அப்படியே மந்த்தை உருக்கியது. அதை ரசித்தபடியே அரண்மனை திரும்பினார். வழை முழுவதும் அந்த் இசையே மனம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டது. மறுநாள் இசைக் கலைஞர் திரு தான்சென் வந்தார். வழக்கம் போல் அக்பர் முன் பாடத்தொடங்கினனர். ஆனால் அக்பருக்கோ முதல் நாள் கேட்ட ஹரிதாஸ்ஜியின் பாடலே மனசில் நின்றது. பாட்டு முடிந்தவுடன் அக்பர் தான்செனைக் கூப்பிட்டார். "தான்சென், எனக்கு ஒரு சின்ன சந்தேகம், நான் நேற்று ஹரிதாசரின் பஜனைகளைக் கேட்டேன். அதிலிருந்து என் மனதில் ஒரு பரவசம் ஏற்பட்டு மனம் நிறைந்திருக்கிறதே, அந்தப் பாடலகள் என் உள்ளததைத் தொட்டுவிட்டன. நீயும் மிக அழகாகப் பாடுகிறாய், ஆனால் என் உள்ளத்தைத் தொடவில்லையே!

"மன்னா, நான் உங்களுகாகவே பாடுகிறேன். அப்போது உங்கள் முகத்தையேதான் கவனிக்கிறேன். உங்கள் முகத்தில் ஆனந்தம் ஏற்படுகிறதா என்றும் பார்க்கிறேன். ஆனால் ஸ்ரீ ஹரிதாஸ்ஜியோ கடவுள் உருவமே நினைப்பில் கொண்டு பாடுகிறார். அவர் பாட்டில் ஸ்வாமி என் பாடல் உங்கள் செவியில் கேட்கிறதா? கிருபைச்செய்யுங்கள், உங்கள் உள்ளம் எனகாக இரங்குமா? என்று விரஜ மொழியில் பாடுகிறார். இறைவனைத் தவிர அவருக்கு வேறு சிந்தனை இல்லை, அதனால் தான் அது அவ்வளவு உயர்வாக இருக்கிறது' என்றார் பணிவுடன்.

ஆகையால் அன்பு குழந்தைகளே,

பஜனை என்பது உள்ளத்திலிருந்து வரவேண்டும். இறைவன் சிந்தனையிலேயே மூழ்கிப் பாடவேண்டும். அப்போது அது எல்லோர் இதயத்தையும் தொட்டு விடும். கடவுள் மரும் இடமல்லவா நம் இதயம். உள்ளம் உருகப் பாடவேண்டும்.

அன்புடன் அம்மம்மா

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants