தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- சிந்தனை செய் மனமே
என். சுரேஷ்
சிந்திப்போம்

கவலை ஒன்றுமில்லை
நிலையுணர்தல்
மோதிரமில்லையென்ற
கவலை தீர்க்கும்!
அகதிகள் முகாமில்
ஒரு நொடி வாழ்தல்
அவர்களின் விடியலில் தான்
நம் சுதந்திரம் என்றிடும்!
அடுத்தவனின் நிலையறியும்
அழகிய ஒற்றை வழி
அவன் நிலையிலிறுந்து
நமது தவறைக் காண்பதே!
யாரையும்
காயப்படுத்தாத மனதில்
யாரிடமும் கோபமில்லை,
யாராலும் கவலையுமில்லை!
தீயைக் கண்டு எரிந்து விடாத,
மழை வெள்ளம் கண்டு ஈரமாகாத
திரை போல் நம் மனமிருந்தால்
அமைதி நிச்சயம்!
என். சுரேஷ்
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||
| Designed and maintained by AKR Consultants | |||||||













